Skip to content

திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை அடுத்த  ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன்(72). இவரது மனைவி தைலம்மை(65).விவசாயியான கணேசன்,தைலம்மை தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.ஒருவர் உள்ளூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கணேசன்,தைலம்மை்இருவரும் வீட்டிற்கு் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வயதான தம்பதியினரை தாக்கி கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த  நகை மற்றுமம் பணம் 15,000 ரூபாய் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து  சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியினர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொள்ளைப்போன நகைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு 5 லட்சம் என கூறப்படுகிறது. பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று திருட்டு போனது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!