Skip to content
Home » திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக கோட்டை காவல்நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த  வழக்கு  திருச்சி ஜெ.எம். 1. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதிமுக  மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் மாவட்ட ஆவின் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணைசெயலாளர் வனிதா, மலைக் கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்.எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் சகாதேவ் பாண்டி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார்உட்பட அதிமுகவினர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.  வழக்கை விசாரித்த  நீதிபதி  சுபாஷினி வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!