Skip to content

வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும், மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும் QR code மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு வார்டு தோறும் உள்ள வீடுகள் அதிலுள்ள குடியிருப்போர் பற்றிய விவரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் மாநகராட்சி தொடர்பான புள்ளி விவரங்களை கணக்கெடுத்து QR code ஸ்டிக்கர்களை ஒட்டிட ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

எனவே இப்பணிக்கு அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி  ஆணையர்  வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். விடுத்துள்ளார்.  இந்த பணியை பரிட்சார்த்த அடிப்படையில்  முதலில் வார்டு 22-ல் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!