திருச்சி மாநகராட்சி ஆணையர் .வே.சரவணன் தலைமையில் இன்று (04.11.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆணையர் சரவணன் உத்தரவிட்டார்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துணை மேயர் ஜி.திவ்யா, மண்டத் தலைவர் துர்காதேவி , நகரப் பொறியாளர் .பி. சிவபாதம், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.