Skip to content
Home » தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  இன்று (20.01.2023) தொடங்கி வைத்தார். மேலுமு் உரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்

பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) முனைவர் அ.குணசேகரன்,துணை இயக்குநர் திருமதி.ஐ.மகாராணி, முன்னாள் படைவீரர் நலத்துறையின் துணை இயக்குநர் லெப்.கமாண்டர். திருமதி.தி.சங்கீதா(ஓய்வு), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திரு.ஆர்.கலைச்செல்வன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!