Skip to content

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உள்ளே சென்று பார்ததுள்ளார். அப்போது கடையில்  கல்லா பெட்டியில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கார்த்திகேயன் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸ் எஸ்ஐ வினோத் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்து வந்தார். இந்தநிலையில் கடையில் பணத்தை திருடியதாக திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்கிற தேவா என்கிற வாலிபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!