Skip to content
Home » திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்டாப்பில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட ஓட்டுநர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அதிலிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். சில நிமிடங்களுக்குள் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. தகவலறிந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  எனினும், அதற்குள்ளாக பஸ் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!