Skip to content
Home » திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய
தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார் . 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வுதி திட்டத்தை வரவேற்று தங்களுக்கும் ஒய்வூதியம் ரூபாய் 7800 வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களிடமே அதை ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். இக்கூட்டத்தில் பிச்சமுத்து கலைச்செல்வி சரோஜா ஆகியோர் முன்னிலவைத்தனர் இறுதியில் மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!