Skip to content

திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபன்(26). இவர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வேளாங்கண்ணி சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் தான் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை கழற்றி அலமாறியில் வைத்து விட்டு தூங்க சென்றார்.

சிறிது நேரத்தில் கண்விழித்து பார்த்த போது சங்கிலியை காணவில்லை. இதுகுறித்த காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டனர். விசாரணையில் சங்கிலியை திருடியது பாலக்கரையை சேர்ந்த ரகுராம்(20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!