Skip to content

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 29,43,584 ரூபாய் மதிப்புள்ள 476 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது – மேலும் செல்போன்கள்,வாட்ச் உள்ளிட்ட பொருட்களில் தங்க நகை தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதனையும் அதிகாரிகள் கைப்பற்றினார். இதனை அடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அப்பயணியை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!