Skip to content
Home » என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

  • by Senthil

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின்புரமோஷன்கள் நடந்து வருகிறது.   பல்வேறு மாநிலங்களில் இந்த புரமோஷன்கள் நடத்தப்பட்டது.

திருச்சிஎன்ஐடி கல்லுரி வளாகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் மணிரத்தினம் , நடிகர் விக்ரம் , நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி

 

ஆகியோர் தனி விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள்  கார் மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று  ஓய்வெடுத்தனர்.  மாலை அங்கிருந்து புறப்பட்டு  நிகழ்ச்சி நடக்கும் என்ஐடி கல்லூரிக்கு செல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!