Skip to content
Home » திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்  இன்று  விமான நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனருமான  சத்யபிரியா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  விமான நிலைய இயக்குனர் P.சுப்பிரமணி  விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, படை, குடியேற்ற பணியகம்,

சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள்,   அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.  இக்கூட்டம்  அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!