Skip to content
Home » சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் நடந்து கொண்ட  ஆண் பயணியின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது அவர் பேகில் கொண்டு வந்த Nestle சாக்லேட் பவுடர் டப்பாவில் 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் Rs. 21,55,038 மதிப்புள்ள 386 கிராம் 3 தங்க செயின்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!