Skip to content

திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாக புகார் வந்தது.

இதைதொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பிரபாகரன், அருண்குமார், முகமது மீரான் செந்தில் ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் 14 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்ப
ட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தலா
ரூ.1000  அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்த கூடாது எனவும் மீறினால்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!