கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது..
திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.பிறகு அவரிடம் இருந்து ரூபாய் 700 பணத்தை
பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இது தொடர்பாக காளிமுத்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவரங்கம் கீழ வீதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) திருவானைக்கா காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்த முத்தையன் (வயது) ஆகிய பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை வைத்திருந்த வாலிபர் கைது
திருச்சி பிப் 22- திருச்சி கீழக்கடை பஜார் பகுதியில் காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது இதையடுத்து போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மட்டும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.