Skip to content
Home » அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

  • by Senthil

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராணுவத்தில்(அக்னிவீர்) ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்  பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச் 15 ம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம் , அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் .

இந்தியா முழுவதும் 176 இடங்களில் இந்த பொது நுழைவு தேர்வு நடைபெறும் , திருச்சி மண்டலத்தை பொருத்தவரை திருச்சியில் இரண்டு இடங்களிலும், திருநெல்வேலியில் ஒரு இடம் என மொத்தம் மூன்று இடங்களில் பொது நுழைவு தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு கட்டணம் 500 ரூபாய், இதில் 250 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும் 50% செலவை ராணுவம் ஏற்கும். ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும் தேர்வு நடைபெறும்.

இவ்வாறுஅவர்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!