Skip to content

திருச்சி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பாரதியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 23ம் ஆண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 31ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து எட்டாம் தேதியான நேற்று அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வாக இன்று

பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தி கொண்டு வீதி உலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!