Skip to content

முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் விசாரணையில் இறந்து போனவர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த

கோபாலகிருஷ்ணன் என்பதும் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றனர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிய வந்தது இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தது எப்படி வேறு யாராவது அவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!