Skip to content

ரயிலில் கத்தியை தீட்டி கல்லூரி மாணவர்கள் ரகளை… வீடியோ… 2 பேர் கைது..

சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று புறப்பட்ட சமயத்தில், அதில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கூட்டம் ஒன்று, அபாயகரமாக தொங்கிய படி கையில் இருந்த அலுமினிய பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படியே, அதில் ஒரு மாணவன் ஜன்னலில் தொங்கிய படியும் நாங்க எல்லாம் பச்சையபாஸ் காலேஜ், எங்கக்கிட வம்பு வச்சுக்காதீங்க

என கோஷம் போட்டுக் கொண்டு, பயணம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஆதாரமாக கொண்டு,
ரயில்வே பாதுகாப்புப்படை காவலர், ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,
ரயில்வே சட்டம் 1989 ன் படி வழக்கு பதிந்து, ரயில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு இருவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!