Skip to content
Home » திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Senthil

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபருக்கு 50 வயது இருக்கும். வலது கையில் ஆனந்த் என பச்சை குத்தி உள்ளார். அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் கிடைக்கவில்லை.்

இவரைப்பற்றிய தகவல்   தெரிந்தவர்கள் 99425 22477 , 94981 01978 என்ற எண்களில் ரயில்வே எஸ்.எஸ்.ஐயை தொடர்பு கொள்ளும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!