கோவை மாநகரப் அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகுள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி எளிதாக டிக்கெட் பெற முடியும். இதற்காக பேருந்துகளில் உள்ள நடத்துனர்களுக்கு பிரத்யேகமாக க்யூஆர் (QR) கோடு வழங்கப்பட்டு உள்ளது.
பயணிகள் தங்கள் கூகுள் பே செயலியில் உள்ள ஸ்கேனர் மூலம் அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, பயணக் கட்டணத்தை செலுத்தி உடனடியாக டிக்கெட் பெறலாம். இந்த புதிய முறையின் மூலம் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். சில்லறைப் பிரச்னைகள் தவிர்க்கப்படும், நேர விரயம் குறையும், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக இது அமைந்து உள்ளது. மேலும், நடத்துனர்களுக்கும் இது எளிதான மற்றும் பாதுகாப்பான கட்டண வசூல் முறையாக இருக்கும்.
இந்த புதிய வசதிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விரும்புபவர்களுக்கு இது மிகவும் வசதியானதாக இருக்கும். கோவை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முயற்சிபொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே தொலைதூர பஸ்களில் இந்தகைய வசதி நடைமுறையில் உள்ளது.