Skip to content

திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! திருப்பத்தூரில் 1581 பயனாளிகளுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 16 துறை சார்பாக

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 1581 பயனாளிகளுக்கு 29 கோடியே 21லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி கடன், வங்கி கடன்.மற்றும் விவசாயிகளுக்கு விதை மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம்.இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

பின்னர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் சமத்துவ உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். நகர செயலாளர் ராஜேந்திரன். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன் . சத்யா சதீஷ். காவியா விஜயா அருணாச்சலம் திருப்பத்தூர் துணை சேர்மன் ஏ ஆர் சபியுல்லா.கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் பயனாளிகள் திமுக கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!