Skip to content
Home » லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். இன்று அதிகாலை குளித்தலை அருகே தேவதானம் என்ற இடத்தில் வந்த போது எதிரே திருச்சியில் ஜல்லி லோடு இறக்கி விட்டு கரூர் நோக்கி குளித்தலை அருகே கீழ வெளியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஒட்டி வந்த டிப்பர் லாரியும், ஈச்சர் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

இதில் ஈச்சர் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அரவிந்த் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த டிப்பர் லாரியின் டிரைவர் தங்கவேல் மற்றும் லாரியில் உடன் வந்த உரிமையாளர் தமிழழகன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஈச்சர் சரக்கு வாகனத்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து இருந்ததால் அரவிந்தனின் உடலை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தின் சேதம் அடைந்த முன் பகுதி முழுவதையும் அகற்றிய பின் அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!