Skip to content

தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (வயது 42). இவர் 22.07.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் குமாரின் மீது ஏற்கனவே பல மதுக்குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே குமார் இது போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி வைத்த பரிந்துரையின் அடிப்படையிலும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!