Skip to content

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள், டாக்டர் உதயகுமாரை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் 3 பேரும் முகமூடி அணிந்திருந்தனர். இதனால் அவர்களை சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

ஆனாலும் தெருவில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளைக்கொண்டு பழனி போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!