Skip to content

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக இவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பலத்த காயமடைந்த ஜெயமணி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!