தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்தது.முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது . இந்த மழையினால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொது மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
