Skip to content
Home » மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மூதாட்டியிடம் விலாசம் கேட்டுள்ளனர். அதற்கு மூதாட்டி இது ஆனைமலை போகும் வழி என்று கூறியுள்ளார்.

அதற்குள் இளைஞர்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு கிடா ஆட்டை எடுத்து தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு மூவரும் கிடாவுடன் தப்பி சென்றுள்ளனர்.மூதாட்டி சத்தம் போட்டவாறு பின்தொடர்ந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அதற்குள் இருசக்கர வாகனம் மறைந்து விட்டது.

இதனை அடுத்து தனது மகன் மகாலிங்கத்திடம் நடந்த விஷயத்தையும் இருசக்கர வாகன எண்ணுடன் கூறியுள்ளார். கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மோகன்பிரசாத் (19), அஜய்குமார் (19), வெங்கட்ரமணி (19) என்பது தெரிய வந்தது. உடனடியாக இளைஞர்களை கைது செய்யப்பட்டு இவர்கள் மேலும் திருட்டு சம்பவத்தில் தொடர்புள்ளதா என கோட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!