Skip to content
Home » பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில்..தஞ்சை மாணவரிடம் விடிய விடிய விசாரணை…

பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில்..தஞ்சை மாணவரிடம் விடிய விடிய விசாரணை…

தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). பி.ஹெச்.டி. படிக்கும் மாணவர் என்று கூறப்படுகிறது. இவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தது என்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவை தஞ்சை மாவட்டம் பூண்டியிலிருந்து வந்ததாக தெரியவந்ததை அடுத்து டெல்லியிலிருந்து சிறப்பு அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்று அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சிபிஐ அதிகாரிகள் உள்ளூர் போலீசார் யாரையும் நெருங்க விடவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!