Skip to content
Home » பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.

மஞ்சள் கொத்து தரத்தை பொறுத்து ரூ 6 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனைக்கு கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை பகுதியில் மஞ்சள் கொத்து போதிய சாகுபடி இல்லை. இதன் காரணமாக மஞ்சள் கொத்துக்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. தற்போது 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும் மஞ்சள் கொத்துக்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது.

மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விற்பதாக வியாபாரிகள் சொல்கின்றனர். அதே நேரத்தில் போதிய வருமானம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது மஞ்சள் கொத்து சந்தையில் 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!