Skip to content
Home » தஞ்சை அருகே ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம்….

தஞ்சை அருகே ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம்….

உலக நன்மைக்காக ஸ்ரீ ராதா கிருஷ்ண விவாஹ மஹோத்ஸவம் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்தது. நேற்று முன் தினம் காலை பூர்வாங்கம், விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனை, மாலை ஸ்ரீ ரங்கம் ப்ரம்ம ஸ்ரீ ரகுநாதன் குழுவினரின் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரம நாம பாராயணம், கல்யாணபுரம் ஸ்ரீனிவாசன் குழுவினரின் நாத சங்கமம், கலாமணி குடந்தை ஸ்ரீ சுப்ரமணிய பாகவதர் குழுவினரின் பக்தி வேஷங்கள், தேப்பெருமா நல்லூர் சந்திரசேகரனின் அபிநய நாட்டியம், இரவு திவ்ய நாம பஜனை, டோலோத்ஸவம் நடந்தது. நேற்று காலை சம்ப்ரதாய உஞ்ச வ்ருத்தி, ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம் நடந்தது. இதன் பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் ஹரிஹரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். பட விளக்கம் : உலக நன்மைக்காக ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!