Skip to content

தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரை சேர்ந்தவர் சகாயநாதன். இவது மனைவி குளோரி (54). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பணி முடிந்து தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே ரெத்தினசாமிநகர் 8-வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் குளோரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த குளோரி அலறியுள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அந்த பைக்கை பின்தொடர்ந்து சென்றார். இருப்பினும் அந்த மர்மநபர் பைக்கை விரைவாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் குளோரி புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!