Skip to content
Home » தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மெயின் சாலை வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் போதை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர மணியரசன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் பேரூராட்சி தலைவி பூங்குழலி, கவுன்சிலர்கள் பாலகிருஷ்னன் , தேன்மொழி, பிரகாஷ் உட்பட என்.சி.சி, ஜெ.ஆர்.சி மாணவர்கள், ஆசிரியர்கள் முருகானந்தம், செல்வகுமார், சரவணன், ராஜ்குமார், சண்முகம் உட்பட கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!