Skip to content
Home » தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தினர். அதில் அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த சரவணன் (35) என்பதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!