Skip to content
Home » தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார்.

நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே தனியார் பள்ளி எதிரில் தனது பைக்கை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஐயப்பனின் கழுத்தில் இருந்த இரண்டே முக்கால் பவுன் தங்க செயினை சட்டென்று பறித்துக் ொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் திருடன், திருடன் என்று கத்திக் ொண்டே அந்த மர்மநபர்களை பின்தொடர்ந்து ஓடினார். ஆனால் அதற்குள் அந்த 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ஐயப்பன் தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!