Skip to content

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாட்டாத்திக் கொல்லைக்காடு கடைவீதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!