Skip to content

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் வடக்கு வாசலை சேர்ந்த சூர்யா (23 ) என்பதும் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும் சூர்யா மீது தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், ரவுடி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சூர்யாவிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!