தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டி முருகன் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் தெய்வராஜ். இவரது மனைவி தமிழரசி (45). கடந்த 25ம் தேதி காலை 100 நாள் வேலைக்காக தமிழரசி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். பின்னர் மாலை 4 மணிக்கு திரும்பி வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அறைக்குள் சென்று பார்த்த ோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழரசி செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.