Skip to content

தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண். திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்துாரை சேர்ந்த பிரவீன்,32, ராஜ்கபூர்,25,. இருவரும் டூ வீலரில் வந்துள்ளனர். அப்போது, 45 பெண்ணிடம் லிப்ட் கொடுப்பதாக கூறி பீரவீன் ஒரு டூ வீலரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். பின்னால் ராஜ்கபூர் வந்துள்ளார். பூதலுாரை தாண்டியதும், ஆள் இல்லாத வயல் பகுதிக்கு 45 வயது பெண்ணை பிரவீன், ராஜ்கபூர் அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பெண் கூச்சலிட்டுள்ளார். அவரை தாக்கி விட்டு, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால், 45 வயது பெண்ணின் மகள் தனது தம்பியை விட்டு தேடி வர சொல்லியுள்ளார். அவர் தேடி வரும் போது வழியில் 45 வயது பெண் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து அவரை அழைத்து சென்றார். அந்த இளைஞர் வருவதை பார்த்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் தப்பியோடி விட்டனர். இது குறித்து பெண் அளித்த புகாரின் பேரில், பூதலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!