Skip to content
Home » தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி கடந்த 18ம் தேதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் பகுதியில் சென்ற இந்த காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த திமுக சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் சேட் முகமது (65), ஊரணிபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த திமுக நகரச் செயலர் சஞ்சய் காந்தி (45) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஊரணிபுரம் புது விடுதியைச் சேர்ந்த சுந்தர் (50) விபத்து நடந்த அன்று இரவு உயிரிழந்தார். மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ராஜா (42), காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ் (40), மற்றொரு காரில் வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரைச் சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36) ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இவர்களில் ராஜா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!