Skip to content

அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே காவலூரில் கால் நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பொது சிகிச்சை, ஆடு, மாடு, நாய்களுக்கு குடற் புழு நீக்கல், மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கல், சினை பார்த்தல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சையை

புண்ணிய நல்லூர் கால் நடை உதவி டாக்டர் ரகுநாத், கால் நடை ஆய்வாளர் ராமச் சந்திரன், கால் நடை பராமரிப்பு உதவியாளர் விஜயா மேற்க் கொண்டனர். சிறந்த கிடேரி கன்றுக் கான பரிசினை ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் குமார் வழங்கினார். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப் பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!