Skip to content
Home » மகளிடம் பேசாதே…. தந்தைக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர் கைது…

மகளிடம் பேசாதே…. தந்தைக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர் கைது…

  • by Senthil

தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (46) . பெயிண்டர். இவரது மகள், கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பாலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார். இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

—————————————————————————————————————————-

தஞ்சையில் பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை அருகே தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (26). இவர் தனது பைக்கை மோட்டார் சைக்கிளை தஞ்சாவூர் நம்பர் ஒன் வல்லம் சாலையில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஸ்ரீராம் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!