Skip to content

தஞ்சை அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழ களக்குடி அண்ணா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி ( 37 ). அவரது கணவர் லட்சுமி, அவரது மகன் பாண்டி 3 பேரும் கடந்த 14 ம் தேதி இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் தஞ்சாவூர்-நாகப்பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கோவிலூர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் கீழே விழுந்து காயம் அடைந்த மூன்று பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கரிகார் சோழன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!