Skip to content

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது, தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது X தள பக்கத்தில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள், இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரது அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம் ஆகியவை அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், முழு விளையாட்டு உலகிலும் இணையற்ற சிறப்பின் அடையாளமாக ஆக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!