ஆவணி முதல் தேதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்டு அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு சாற்றி,பால் ,தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அரிசி மாவால்
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.