Skip to content

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.  நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தோ்தலில் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.  காலையிலேயே வாக்குப்பதிவு விறுப்புடன் காணப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

தெலங்கானா , மிசோரம்,  சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும்  டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பது யார் என்று 3ம் தேதி பிற்பகலில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!