திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி ஜாதி மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த விவகாரங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு ஜாதி ரீதியாக மாணவர்களை தூண்டு விடுவதும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருநெல்வேலி மாவட்டம் மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். இதற்கு ஜாதி தான் காரணம் என கூறப்பட்டது. இந்த விவகாரம் தொரட்பாக பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் கோபிதாஸ் திருநெல்வேலியில் தங்கி ஆய்வு மேற்கொண்டார். மேலும் உளவுத்துறை போலீசாரும் அறிக்கை அனுப்பியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருநெல்வேலி டவுன், மருதகுளம், நாங்குநேரி, கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்களுடன் சேர்ந்து கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் கோபிதாஸ் திருநெல்வேலியில் தங்கி ஆய்வு மேற்கொண்டார். பணியிட மாறுதலுக்கு ஆளான ஆசிரியர்கள், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். இருப்பினும், கலெக்டர் உறுதியாக இருப்பதால், பணியிட மாறுதலை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
- by Authour
