Skip to content

ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர்களின் போராட்டம்

நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி பயிலாமல் திரும்புவதாகவும் ஏற்கனவே கொரோனா காரணத்தினால் படிப்பு தடையான நிலையில் தற்போது ஆசிரியர்களின் போராட்டத்தினால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் முதல்வர் அவர்கள் மற்றும் கல்வி துறை அமைச்சர் விரைந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!