Skip to content

அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மது கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து  பதறி ஓடினார்.

இதனால் மதுப் பிரியர்கள் மதுபான கடையை விட்டு சற்று தள்ளியே நின்றனர். அதன் பிறகு அங்கிருந்த குடி மகான் ஒருவர் அந்த சாரைப் பாம்பை லாபகரமாக கையால் பிடித்து வெளியில் உள்ள ஏரியில் அப்புறப்படுத்தினார். மது பிரியர்கள் நேரமாகி போனதால் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கடையில் நின்று பாம்பை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாம்பை அப்புறப்படுத்திய பிறகு மது பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . சுமார் 10 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் அவர்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்..இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!