சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசராணையில் ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் விலகினா்.
இந்த நிலையில் , எஸ்எம் சுப்ரமணியம், ராஜசேகர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. வரும் 8, 9 தேதிகளில் இறுதி வாதம் நடத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் அமர்வை மாற்றக்கோரி மூத்த வழக்கறிஞர் கேஎம் விஜயன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது , வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றகோரி முறையிட்டு இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அவசரமாக பட்டியிலிடக்கோரி. தமிழ க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்திரி இன்று இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடடம் முறையிட்டார்.
அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த முந்தையை மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் அதில் பல்வேறு சட்டசிக்கல்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் இந்த இடமாற்ற விஷயத்தையும் அதனுடன் பட்டியலிட் வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார்.
ED நடத்திய சோதனைகள் அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை என்பதால் இந்த வழக்கை மும்பை, கொல்கத்தா, அல்லது டில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அரசு கோரிக்கை வைத்துள்ளது. ED விசாரணை முறைகேடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.
அரசியலமைப்பின் பிரிவு 139A இன் கீழ் (ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும்) அரசு அணுகியுள்ளதாக அவர் கூறினார். அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த முந்தைய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் , அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் இந்த இடமாற்ற விஷயத்தையும் அதனுடன் பட்டியலிட வேண்டும் என்று;ம் சவுத்திரி கூறினார்.
இந்த விஷயத்தை பட்டியலிட தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார் . ஆனால் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமா என்று தெரியாது. வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசு மற்றும் டாஸ்மாக் தானே முன் வந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோருவரு விநோதகமாக உள்ளது. இதற்கான தகுந்த காரணத்தை தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வைக்கவேண்டும்.